கோவை, சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை, சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பள்ளியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதற்றமான மனநிலை காணப்பட்டது. பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் அதனை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

முன்னதாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com