/

கோவிலூர் ஜல்லிக்கட்டில் சீறிய காளைகள்!

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு காளைகளை தீரத்துடன் அடக்க முயன்று வருகின்றனர்.

News image
Updated On :5 மார்ச் 2024, 10:39 am IST

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் ஜல்லிக்கட்டில் போட்டி நடைபெற்று வருகிறது.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கிவைத்தார்.

Story image

தொடர்ந்து, வாடி வாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டு காளைகளை தீரத்துடன் அடக்க முயன்று வருகின்றனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Story image

ஜல்லிக்கட்டுத் திடல் அருகே மருத்துவத்துறை, கால்நடைத் துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இப்போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோ ர்பார்வையிட்டு வருகின்றனர். ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல் ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.