மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு: ஓபிஎஸ் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு: ஓபிஎஸ் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு: ஓபிஎஸ் அறிவிப்பு
வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும்: அரசு ஒப்புதலுக்குப் பிறகு அமலாகிறது

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதை அடுத்து, கூட்டணி குறித்து பேர்ச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.

அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com