தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து அருகில் உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, வண்டிப் பெரியாறு, கட்டப்பனை, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் கடந்த பல ஆண்டுகளாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
கரோனா காலகட்டத்தில் மாநிலங்களிடையே போக்குவரத்து தடைசெய்யப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் போக்குவரத்து இயங்கவில்லை.
அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக இடுக்கி மாவட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக மற்றும் கேரள பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 5 முதல் கம்பத்திலிருந்து கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 6 பேருந்துகள் குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக இயக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளத்தின் முக்கிய நகரங்களுக்கு கம்பம் நகரில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் பொதுமக்கள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

கேரளத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை : பிரதமர் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


