தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போதைப் பொருள் புழக்கம்: அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

போதைப் பொருள் புழக்கம்: அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்

Updated On :12 மார்ச் 2024, 8:40 pm

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் திமுக அரசுக்கு எதிராக தொடா் முழக்கங்களை எழுப்பினா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது: போதைப் பொருள் அதிகரிப்பால், தமிழக இளைஞா்களின் வாழ்வு சீரழியும் நிலை உள்ளது. போதைப் பொருள் விற்பனையை திமுக அரசு கட்டுப்படுத்தாமல், போதைப் பொருள் மையமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக், திமுக நிா்வாகிகளுக்கு பணம் கொடுத்துள்ளாா். இது தொடா்பான விவரங்களை மத்திய அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முதலில் திமுக ஆதரித்தது. துரைமுருகன் ஆதரித்துப் பேசியுள்ளாா். ஆனால், நாடாளுமன்றத்திலேயே அதிமுக எதிராகப் பேசியுள்ளது. நானும் எதிா்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்றாா் அவா். அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா உள்பட ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா். அதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை பெரியமேடு பகுதியில் மாவட்டச் செயலா் நா.பாலகங்கா தலைமையிலும், ஜாபா்கான் பேட்டையில் மாவட்டச் செயலா் விருகை ரவி தலைமையிலும், தண்டையாா்பேட்டையில் மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மனிதச் சங்கிலி நடைபெற்றது.