மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 4, ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகள்?

சென்னையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாக தகவல்.

News image
Updated On :13 மார்ச் 2024, 3:25 am

DIN

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாரதிய ஜனதா மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் ஏற்கெனவே தொகுதி பங்கீடு முடிவடைந்து, போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஏற்கெனவே டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், அமமுகவுக்கு 4 தொகுதிகளும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.