ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாட்ஸ்ஆப் எமோஜி அனுப்பியது குற்றமா? நீதிமன்றத்தின் பதில்!

எமோஜி அனுப்பியதால் பதவி நீக்கப்பட்ட வழக்கு: நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

News image
Updated On :13 மார்ச் 2024, 9:36 am

DIN

வாட்ஸ் ஆப்பில் 'தம்ஸ் அப்' (கட்டைவிரலை உயர்த்தி காட்டுவது போலான) எமோஜி பயன்படுத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

2015-ல் ரயில்வே காவலர் பிரிவில் பணியில் சேர்ந்த நரேந்திர செளகான் என்கிற காவலர் 2018-ம் ஆண்டு வாட்ஸ் ஆப் குழுவில் வந்த செய்திக்கு ‘தம்ஸ் அப்’ எமோஜி அனுப்பியுள்ளார்.

அந்த செய்தி, துணை தளபதி ஒருவரை காவலர் கொடூரமாக கொன்றது பற்றியது. காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வு காவலர்களின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது.

இந்த செய்திக்கு செளகான் அனுப்பிய எமோஜி, குற்றவாளிக்கு ஆதரவளிப்பதாக உள்ளதாகக் கூறி அவருக்கு மெமோ வழங்கப்பட்டது.

ஒழுங்கு நடத்தை குழு விசாரித்து செளகானை பணி நீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து செளகான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.விஜயகுமார் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, ‘தம்ஸ் அப்’ எமோஜி என்பது ஓகே (சரி) என்பதற்கு பதிலீடு தானே தவிர கொடூர மரணத்தை வரவேற்பது கிடையாது எனவும் காவலர் அந்த செய்தியைப் பார்வையிட்டதற்கான ஒப்புதல் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் காவலர் அளித்த விளக்கத்தை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.