எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்வதாக இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2024, 10:45 am IST

கம்பம்: பருவ கால நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணையகத்தின் தலைமையிலான கண்காணிப்பு குழு அணைப் பகுதிகளில் உறுதி தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும். 

தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம், நீர் கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வர்.

திங்கள்கிழமை ஆய்வு நடத்த மத்திய கண்காணிப்பு தலைமை குழு முடிவு செய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை முதல் தேர்தல் விதி முறைகள் அமல்படுத்தப்பட்டதால் அணையில் ஆய்வு செய்வது ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளரும், பெரியாறு அணையின் செயற்பொறியாளருமான (பொறுப்பு) ஜே.சாம்இர்வின் கூறியது,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்யும் நிகழ்வு மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.