மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

முதல்கட்டமாக மார்ச் 24 முதல் 31ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.
மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

திருச்சியில் மார்ச் 24ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

முதல்கட்டமாக மார்ச் 24 முதல் 31ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். இதில் அதிமுக சார்பிலும் கூட்டணி கட்சி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் 24-ல் திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். (மாலை 4 மணி)

மார்ச் 26-ல் தூத்துக்குடி (மாலை 4 மணி), திருநெல்வேலியில் (இரவு 7 மணி) பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 27-ல் கன்னியாகுமரி (மாலை 4 மணி), தென்காசி (இரவு 7 மணி) தொகுயில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மார்ச் 28-ல் விருதுநகர் (மாலை 4 மணி), ராமநாதபுரம் (இரவு 7 மணி) தொகுதிகளில் பிரசாரம்.

மார்ச் 29-ல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பிரசாரம்

மார்ச் 30-ல் புதுச்சேரி, கடலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 31-ல் சிதம்பரம் (மாலை 3.30 மணி), மயிலாடுதுறை (மாலை 5.30 மணி), நாகப்பட்டினம் (மாலை 7.30 மணி) தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com