சென்னையில் தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் பாலன் இல்லத்தில் மாநிலக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது
இக்கூட்டத்துக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிவித்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை. செல்வராஜும், திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயனாயும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடவுள்ளதாக முத்தரசன் அறிவித்தார்.
இந்திய கம்யூ. கட்சியின் சார்பில் நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை. செல்வரா போட்டியிடும் வை. செல்வராஜ் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12 ஆண்டுகளாக செயல்பட்டவர் என்று முத்தரசன் தெரிவித்தார்.
திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இந்திய கம்யூ. வேட்பாளர்களை மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் அறிவித்தார்.