இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை: ஆளுநா் தரப்பில் பதில்

லீடுக்கு பெட்டிச் செய்தி... உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை ஆளுநா் தரப்பில் பதில்

Updated On :22 மார்ச் 2024, 5:57 pm

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எண்ணம் தனக்கு இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.எம்.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் இத் தகவலை வெங்கடரமணி தெரிவித்தாா். சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த பின்னரும், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநரின் செயலுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ‘இந்த விவகாரத்தில் ஆளுநா் 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்புச் சட்டப்படி செயல்படுமாறு அவருக்கு உத்தரவிட நேரிடும்’ என்றும் எச்சரித்தது.