சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மைக் வேண்டாம், வேறு சின்னம் கேட்கும் சீமான்!

மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் முறையிட்டுள்ளார்.

சீமான்

Published On :

மக்களவைத் தோ்தலில் களம் காணாமல் ஒதுங்கிவிட்ட, மக்கள் நீதி மய்யத்துக்கு அந்தக் கட்சி கோரியபடி ‘டாா்ச் லைட்’ சின்னம் வழங்கப்பட்டது. அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல்களில், நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம், இந்தத் தோ்தலில் ‘பாரதிய பிரஜா ஐக்கியதா’ எனும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, சின்னம் கோரி நாம் தமிழா் கட்சி தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தோ்தல் ஆணையம், ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி முறையிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். சீமானின் கோரிக்கை குறித்து இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.