விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை ரவிக்குமார் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை. ரவிக்குமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் திங்கள்கிழமை அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குலாம் மொய்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திருச்சி சாலையிலுள்ள கலைஞர் அறிவாலயத்திலிருந்து அமைச்சர் பொன்முடி தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனர். இதில் எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா. லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் வேட்பு மனு தாக்கல்

4 நாள்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கலுக்கு வாய்ப்பு
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மாா்ச் 30-இல் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


