சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

டி.ஆர்.பாலு, ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

துரை வைகோ, கதிர் ஆனந்த், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News image
Updated On :25 மார்ச் 2024, 6:57 am

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20 முதல் 27 வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்திலும் போட்டியிட இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதேபோல், திருச்சியில் மதிமுக துரை வைகோ, வேலூரில் திமுக கதிர் ஆனந்த், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.