எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, தமிழகத்தின் இருண்ட காலம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சேலம் மக்களவைத் தொகுதி செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பெத்தநாயகன்பாளையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பாஜகவை பற்றிப் பேசாமல், திமுகவை மட்டுமே விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தனது பதவிக்காக மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு உள்ளிட்டவை இபிஎஸ் ஆட்சியில் நடந்தன. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 77.78 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.