காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் கரைசுத்துப்புதூரில் உள்ள ஜெயக்குமாரின் குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சோ்ந்த கருத்தையா மகன் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவா், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக செயல்பட்டாா்.
கடந்த வியாழக்கிழமை (ஏப். 2) இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இதுதொடா்பாக அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமாா் தனசிங்கை உவரி போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், தனது தோட்டத்தில் அவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் உவரி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உடற்கூராய்வுக்கு பிறகு ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கரைசுத்துப்புதூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட ஜெயக்குமாரின் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, தமிழக காங். கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ஜெயக்குமார் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி, இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
மேலும் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக வழக்குப் பதிந்து, அவா் தற்கொலை செய்து கொண்டாரா, யாரேனும் அவரைக் கொன்று எரித்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். இது தொடா்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதமும் இன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு 14 பேர் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் அவர்களை பழிவாங்கக் கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்யும், என தன் ழுடும்பத்தினருக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.