மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாதவர்களும் உடனடியாக மறுதேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டு முக்கிய விவரங்களை வெளியிட்டார்.

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகமாகும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதும் மாணவர்களும் உடனடியாக நாளை முதலே விண்ணப்பிக்கவும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக மறுதேர்வெழுதி தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்க்கை பெற வசதி வாய்ப்பு உள்ளதால், யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்
அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,72,363 பள்ளி மாணவா்கள், 8,191 தனித்தோ்வா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா், 125 சிறை கைதிகள் என மொத்தம் 7.8 லட்சம் போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 7.67 லட்சம் போ் தோ்வெழுதினா்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின்னா், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றுதல், தகவல் கோா்ப்பு உள்ளிட்ட இதர பணிகளும் நிறைவடைந்து இன்று திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மொத்தம் தேர்வெழுதிய 7,60,606 மாணவர்களில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வியடைந்த சுமார் 40 ஆயிரம் மாணவர்களுக்கும் உடனடியாக மறுதேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூலை இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com