அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் அருகே சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற பார்சல் கண்டெய்னர் லாரி அதற்கு முன்னதாக டிராக்டர், டிராக்டருக்கு முன்னதாக கார் ஆகியவைகள் சென்று கொண்டிருந்தன.

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி டிராக்டர் மீது மோதி அடுத்தடுத்து கார் மினி லாரி மீது மோதி விபத்துகுள்ளனது.

இந்த விபத்தில் டிராக்டரில் வந்த மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!
ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

காரில் வந்த 5 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். கார் அப்பளம் போல் நசுங்கிய நிலையில் உள்ளே சிக்கி கொண்டவர்களை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார்(46) என்பவர் கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சால யில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com