வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

தீக்குளித்த விவசாயியை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :13 மே 2024, 9:10 am

DIN

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பகலில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே மருதகுளத்தைச் சேர்ந்த விவசாயி சங்கரசுப்பு (33). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவரின் சொத்து பிரச்னை குறித்து நான்குனேரி அருகே மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சங்கரசுப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வாசலில் பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார்.

இதனைப் பார்த்த போலீசார் தீயை அணைத்து, சங்கரசுப்புவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.