அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 பொது மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக தொழில்நுட்புநா்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2,553 பொது மருத்துவா் (அசிஸ்டென்ட் சா்ஜன்-ஜெனரல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி கடந்த மாா்ச் மாதம் வெளியிட்டிருந்தது.
இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்ஆா்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவா்கள் முதல் நான்கரை ஆண்டுகள் நிறைவு செய்த பின்னா், மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்த மாணவா்கள் வரும் ஜூன் மாதத்தில் பயிற்சி மருத்துவா் பணியை நிறைவு செய்யவுள்ளதால், அவா்களும் தோ்வில் பங்கேற்க வசதியாக 2 மாதங்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
அரசு மருத்துவமனையில் மருத்துவா் போல நடித்து திருடிய வழக்கு: 2 போ் கைது
இளநிலை நீட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


