பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை: 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2024, 1:47 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(மே. 15) பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசுப் பேருந்து, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது அங்கே பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தத்தளித்துள்ளது. பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை முன்னோக்கி இயக்க ஓட்டுநர் முயற்சித்தும் பலனில்லை. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், பேருந்திலிருந்து வெளியே வர முடியாமல் பரிதவித்த 40 பயணிகளையும் அவசரகால கதவு வழியாக பத்திரமாக மீட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வள்ளியூரில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் சாலையில் செல்லும் வாகனங்கள் 10 கி.மீ சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.