நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

சட்டவிரோத மீன்பிடி: 14 இலங்கை மீனவர்கள் கைது

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2024, 3:04 pm

DIN

சென்னை: இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி 14 இலங்கை மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

பாக் ஜலசந்தி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படை கப்பலான ராணி துர்காவதி கப்பலில் உள்ள அதிகாரிகள், தமிழகத்தின் கோடியக்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கவனித்துள்ளனர். சோதனையில், ஐந்து படகுகளிலும் மீன்பிடி உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அவை இந்திய கடல் எல்லைக்குள் தீவிரமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இலங்கையை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேல் சட்ட நடவடிக்கைக்காக மாநில காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.