வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
DOTCOM
Published on
Updated on
1 min read

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் (காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி) உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை காலை அறிவித்துள்ளது.

இந்தப் புயல் சின்னம் வடகிழக்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (மே 24) காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மையம்கொண்டு வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் நோக்கிச் செல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது இந்தாண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும்.

வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை

தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன் முதல் வெள்ளிக்கிழமை வரை கனமுதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளி முதல் சனிக்கிழமை (மே 25-27) வரைதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com