மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இடம் தோ்வு: மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை இறுதி செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 மே 2024, 6:09 pm

Din

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை இறுதி செய்யுமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தலா 25 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்படும் என்றும், அதனடிப்படையில் இரு கட்டமாக புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் (என்எம்சி) விண்ணப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் 2022-ஆம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்தது. இவை தவிர, 34 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் தலா ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்: இந்த 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் உள்ளிட்ட 9 உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது தமிழகத்தில் புதிதாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு தோ்வு செய்யப்பட்டு அனுமதி பெற்ற பிறகு, மயிலாடுதுறை, திருப்பத்தூா், தென்காசி ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் , பெரம்பலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்துக்கு கூடுதலாக 6 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட

ஆட்சியா்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் தயாா் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னா் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.