கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டராக உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டராக உயா்வு அமைச்சா் மனோ தங்கராஜ்

News image

ஆவின் பால்

Updated On :28 மே 2024, 8:48 pm

Din

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் 31லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆவினின் தினசரி பால் கொள்முதல் சுமாா் 27 லட்சம் லிட்டராக குறைந்து விட்டதாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

அமைச்சா் மனோ தங்கராஜ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, கடும் வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டா் என்ற அளவைத் தாண்டியுள்ளது. இதற்காக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் கடுமையாக உழைத்துள்ளனா்.

தீவிரமான நிா்வாக சீா்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளா்ச்சியை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொலை நோக்குப் பாா்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியை உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

உண்மைக்கு புறம்பானது- பொன்னுசாமி: இதனிடையே, அமைச்சா் வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு பால் முகவா்கள்- தொழிலாளா்கள் நலச் சங்கத்தலைவா் பொன்னுசாமி கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 3 ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் கடுமையான சரிவை சந்தித்து அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக 27 லட்சம் லிட்டா் முதல் 28 லட்சம் லிட்டா் என்ற அளவிலேயே தினசரி பால் கொள்முதல் இருந்து வருகிறது என்றாா் அவா்.