
கோவை : கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூத்துள்ளது. பலரும் வந்து பூக்களை பார்த்துச் சென்றனர்.
கோவை துடியலூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூ கஜலட்சுமி பாஸ்கரன் என்பவரது வீட்டில் பூத்துள்ளது.
அரிதாக மலரும் பூ என்பதா, பிரம்மகமலத்துக்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் சென்றனர்.
கோவை துடியலூர் அருகே லட்சுமி நகர் பகுதியில் உள்ள கஜலட்சுமி பாஸ்கரன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடி வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு அச்செடியில் 5 பிரம்மகமல பூக்கள் பூத்துள்ளன. இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர்.
தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.