எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு யோசனை!

இரவில் உறக்கம் வர சின்ன சின்ன குறிப்புகள்

News image
உறக்கம் வர- ANI
Updated On :9 மார்ச் 2026, 3:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

உடல் நலனில் ஏற்படும் சில சின்ன சின்ன மாற்றங்கள் கூட பெரிய நோய்களுக்கு வித்திடலாம். அதில் முதல் இடத்தில் இருப்பது உறக்கம்தான். எனவே ஒவ்வொருவரும் போதிய உறக்கத்தை உறுதி செய்வது அவசியம்.

1. உயிரைப் பற்றி கவலைப்படுபவர்களை விட, தற்போதயை நவ நாகரீக உலகில் தலை முடியைப் பற்றி கவலைப்படுவோர்தான் அதிகம். வாரம் ஒருமுறை ஒரு மூடித் தேங்காயில் பால் எடுத்து தலையில் மயிர்க்காலில் படும்படி நன்றாகத் தேய்த்து, ஊறியவுடன் குளித்து வந்தால் தலைமுடி கொட்டாது. தேங்காய் எண்ணெய் வைக்கவே மாட்டேன் என்ற சொல்பவர்களுக்கு இது உகந்த பலனளிக்கும்.

2. வசம்பை சிறிது நீர்விட்டு மை போல் அரைத்துத் தலையில் தடவி வந்தால், அரை மணி நேரத்துக்குப் பின்னர் தலையை அலசினால் பேன்கள் மடியும்.

3. இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து சிறிது தனியா சேர்த்து அரைக்க வேண்டும். அவற்றை வெந்நீரில் கலந்து வடிகட்ட வேண்டும். தேன், எலுமிச்சைச் சாறுடன் வடிகட்டிய நீரைக் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கி, வயிறு பசி எடுக்கும்.

4. காய வைத்த வெந்தயத்தைப் பொடியாக்கி வைத்துகொள்ளுங்கள். ஒரு டம்ளர் காய்ச்சி ஆறிய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்து கலக்கி, அருந்த வேண்டும். தினமும் குடித்தால் சர்க்கரை நோய் நீங்கும்.

5. தேனில் பேரீச்சம்பழங்களை ஊறவைத்து, இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு பாலை அருந்தினால் நல்ல பசி எடுக்கும்.

6. இரவு உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒரு கிண்ணம் சூடான பாலில் சிறிதளவு தேன் கலந்து பருக, தூக்கம் வரும்.

7. இஞ்சியைத் துண்டுகளாக்கித் தேனில் ஊற வைத்து, சாப்பிட பித்தம் நீங்கும்.

8. வயிற்றில் கிருமி இருந்தால் வேப்பங்கொழுந்துடன் வெல்லம் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடலாம்.

9. முள்ளங்கிச் சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட அனைத்து வகை சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.

10. நெல்லிச் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், இன்சூலின் போடாமலேயே நீரிழிவு கட்டுப்படும்.

-ஆர்.ஜெ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.