வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 3:25 am IST

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சென்னை, அண்ணாநகர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மைதிலி (47). இந்த தம்பதி அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், ஆபிஸர் காலனியில் 9 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், விக்ரவாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த செளமியா (24) என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர் மைதிலியை அணுகி, ஏடிஎம் கார்டு, ஜி-பே ஆகியவற்றின் மூலம் பணத்தை கட்ட சொல்லாமல் பணத்தை நேரில் கொடுக்குமாறு கூறுவதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மைதிலி வரவு-செலவு கணக்குகளை தணிக்கையாளர் (ஆடிட்டர்) மூலம் சரி பார்த்துள்ளார். அப்போது செளமியா, பல நோயாளிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தில் பதிவு செய்யாமல் பணத்தை கையாடல் செய்துள்ளார்.

இத்துடன், மருத்துவமனையில் வங்கிக் கணக்கு (ஜி- பே) வேலை செய்யவில்லை எனக்கூறி, செளமியா தனது வங்கி கணக்கிற்கு ஜி- பே மூலம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இவ்வாறு கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வரை செளமியா ரூ. 52.24 லட்சத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து மைதிலி ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆவண நம்பிக்கை மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கண்ணம்மாபேட்டை, சிஐடி நகர், பாரதி தெருவில் தலைமறைவாக இருந்த செளமியாவை செவ்வாய்க்கிழமை (நவ. 5) போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.