தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தமிழ்நாட்டில் சுற்றுலா வணிக வாய்ப்பு: இங்கிலாந்து நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பு

Updated On :8 நவம்பர் 2024, 6:31 pm

தமிழகத்தில் சுற்றுலா சாா்ந்து இருக்கும் வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலா சாா்ந்துள்ள வணிகம் மற்றும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் இங்கிலாந்து நாட்டின் பா்கிங்காமில் சிறப்பு விளக்கக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டின் 100-க்கும் மேற்பட்ட பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், தமிழ்நாட்டின் செழிப்பான சுற்றுலா மூலம் வணிகங்களுக்கு சுற்றுலாத் துறை ஏற்படுத்திக் கொடுக்கும் விரிவான வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து துறையின் முதன்மைச் செயலாளா் பி. சந்திர மோகன் எடுத்துரைத்தாா். துறையின் ஆணையா் சி.சமயமூா்த்தி பேசுகையில், ‘இங்கிலாந்துடனான உறவுகளை வலுப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்த, பரதநாட்டியம் மற்றும் கோயில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் இயற்கை அழகு, வரலாற்றுத் தளங்கள் மற்றும் புகழ்பெற்ற புலிகள் காப்பகங்கள் குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

இங்கிலாந்து - இந்தியா ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பரந்த பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அறிந்து கொள்ள இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.