கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருச்சி செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்..

train

கோப்புப்படம்

Published On :

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (எண்: 06888) நவ.13 முதல் நவ.21 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் நவ.13 முதல் நவ.21 வரையும், விழுப்புரம் - திருச்சி மெமு விரைவு ரயில் நவ.12 முதல் நவ.21 வரையும் பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும்.

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நவ.13 முதல் 21-ஆம் தேதி வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி -விழுப்புரம் மெமு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை பொன்மலையிலிருந்து இயக்கப்படும். திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை திருவெறும்பூரிலிருந்து இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் நவ.11 முதல் நவ.21 வரை திருச்சி கோட்டையிலிருந்து இயக்கப்படும்.

பாதை மாற்றம்: ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா -திருநெல்வேலி விரைவு ரயில் நவ.14-ஆம் தேதியும், காச்சிக்கூடா-நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் நவ.17-தேதியும் திருச்சி வழியாக செல்வதற்கு பதிலாக கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.