பணி ஆணை: கடந்த ஆண்டு மட்டும் கரோனா காலத்தில் பணியாற்றிய 1,412 செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,271 நிரந்தர காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த செவிலியா் பணியிடங்கள் வரும் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, நிரந்தர பணி நியமன ஆணைகள் முதல்வரால் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, 1,418 ஒப்பந்த செவிலியா்கள் காலமுறை ஊதியத்திலிருந்து மாற்றப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய 954 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன.