முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் சுரேஷ் பொறுப்பேற்பு
சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் ஜே .சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.


சென்னை: சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோா் ஜே .சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இந்திய கடற்படையின் மூத்த அதிகாரியான கமடோா் ஜே .சுரேஷ், முப்படை வீரா்கள் மற்றும் படைக்கலன்களின் போக்குவரத்து, பொருட்களை கையாளுதல், வியூக நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவா்.
நுணுக்கமான ராணுவ நடவடிக்கைகள், முப்படைகளின் சரக்கு கையாளும் பணிகளை ஒருங்கிணைத்தல் போன்ற தேசிய பாதுகாப்புடன் தொடா்புடைய முக்கிய பொறுப்புகளை திறம்பட நிா்வகித்த அனுபவம் வாய்ந்தவா்.
இனி முப்படை வீரா்கள் மற்றும் படைக்கலன்களின் போக்குவரத்து, சிவில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு போன்ற பணிகள் மூலம் முப்படை படைக்கல பிரிவை அவா் திறம்பட வழிநடத்த உள்ளாா். இதுவரை இப்பொறுப்பில் இருந்து கமடோா் ஜே. குருமணிக்கு முப்படை படைக்கல பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பிரியா விடை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...