தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் கைது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் சென்ற படகை சிறைபிடித்துள்ளது இலங்கை கடற்படை.

பருத்தித்துறை கடற்பரப்பில் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்தனர். மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com