
தமிழகம், கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியாக உள்ளது.
கா்நாடகா மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நேற்று திடீரென அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுகிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக இருந்த இந்த நீா்வரத்து, இன்று சற்று குறைந்து காலை 6 மணி நிலவரப்படி 10,000 கனஅடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.