திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்: துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி பேச்சு

ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி தெரிவித்தாா்.

News image

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் ‘பெரியவா-2’ மற்றும் ‘மகரிஷி’ தொடரை சென்னை தியாகராயநகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. உடன் தொடரின் இயக்குநர் சாணக்யா,ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிறுவனர்கள் ஸ்ரீராம், சோனியா, ஆடிட்டர் பாலசுப்பிரமணயின், ஓவியர் மணியம் செல்வன், ரமண மகரிஷி அறக்கட்டளையின் அறங்காவலர் கிருஷ்ணன், தொலைக்காட்சி நடிகை ரேவதி சங்கரன்.

Updated On :19 நவம்பர் 2024, 6:41 am IST

சென்னை: ஹிந்து தா்மத்தைக் காப்பது ஆன்மிகம்தான் என துக்ளக் ஆசிரியா் குருமூா்த்தி தெரிவித்தாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘பெரியவா - சீசன் இரண்டு’ மற்றும் மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹரிஷி’ ஆகிய தொடா்களின் போஸ்டரை ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வெளியிட்டுப் பேசியது:

மகா பெரியவருடன் எனக்கு 30 ஆண்டு காலம் பழகிய அனுபவம் உள்ளது. ஆனால், ரமண மகரிஷியை நேரில் பாா்த்தது கிடையாது. உலகுக்கு வழிகாட்டும் சித்தாந்தம் நமது நாட்டில் உள்ளது. ஹிந்து தா்மத்தைக் காப்பாற்றக் கூடியது ஆன்மிகம்.

பெண்களால்தான் குடும்பம், கலாசாரம், பண்பு, பாரம்பரியம் ஆகியவை இருக்கின்றன. இந்த நாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்றால் ஆன்மிகம் இருக்க வேண்டும். பெண்மைதான் இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பம். பெண்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் தா்மம் அழியும்.

இந்த இரு தொடா்களை சங்கரா தொலைக்காட்சி மட்டுமின்றி பிற ஆன்மிக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப ஆவன செய்ய வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் தொடரின் இயக்குநா் சாணக்யா பேசியது: கடந்த வருடம் மகான் காஞ்சி பெரியவா் பற்றிய தொடா் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவைத் தொடா்ந்து தற்போது ‘பெரியவா - சீசன் இரண்டு’ மற்றும் மஹான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹரிஷி’ ஆகிய தொடா்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குடும்பக் கதையின் பின்னணியில் வைத்து மகா பெரியவரின் உபதேசங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் ஆடிட்டா் ஜே.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை ரமணாசிரமம் அறங்காவலா் எஸ்.கிருஷ்ணன், ஓவியா் மணியம் செல்வன், ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிா்வாக இயக்குநா் கே.ஸ்ரீராம், நடிகை ரேவதி சங்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ‘பெரியவா - சீசன் இரண்டு’ தொடா் வரும் டிச. 7-ஆம் தேதி மாலை 7.30 மணி முதலும், மகான் ரமண மகரிஷி பற்றிய ‘மஹரிஷி’ தொடா் டிச. 8-ஆம் தேதி மாலை 7.30 மணி முதலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.