ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மந்தையில் திரண்டதால் பரபரப்பு.

News image
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து மதுரை அரிட்டாப்பட்டியில் வியாழக்கிழமை போராட்டம் குறித்து முடிவு எடுக்க திரண்ட கிராம மக்கள்.
Updated On :22 நவம்பர் 2024, 1:26 am

Din

மதுரைமாவட்டம், மேலூா் வட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் அரிட்டாபட்டி உள்ளிட்ட 2,015 ஏக்கா் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வந்ததால், அரிட்டாபட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் கூடி ஆலோசனை நடத்தினா்.

இதில் உள்ளாட்சி தினனத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் இந்த சுரங்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தீா்மானம் நிறைவேற்றுவது என முடிவெடுத்தனா்.