சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹூப்ளி ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு

கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2024, 11:40 pm

DIN

சென்னை: கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹூப்ளி - சென்னை சென்ட்ரல் இடையே இருமாா்க்கத்திலும் வாராந்திர விரைவு ரயில்கள் (எண்:17311, 17312, 22697, 22698) இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் டிச.26-ஆம் தேதி முதல் ஜன.19-ஆம் தேதி வரை தற்காலிகமாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இதேபோன்று, யஷ்வந்த்பூா் - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் டிச.29 முதல் ஜன.24-ஆம் தேதி வரை படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டிக்கு பதிலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும்.

வழக்கம்போல் இயக்கம்

பேசின்பாலம் - வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. இந்நிலையில், இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் சென்னை சென்ட்ரல், பெரம்பூா் வந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.