கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி: தேவநாதனின் சொத்துகளை முடக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

உயா்நீதிமன்றம்

கோப்புப்படம்

Updated On :25 நவம்பர் 2024, 9:44 pm

Din

சென்னை: மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளா்களிடம் ரூ. 24 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிா் சங்கா் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துகளை முடக்கக் கோரி அதன் தலைவா் எம்.சதீஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில், நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்துள்ளாா். ஜாமீனில் விடுதலையானால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோா் தங்கள் சொத்துகளை விற்கக் கூடும் என்பதால், அவா்களின் சொத்துகளை முடக்கக் கோரி உள்துறை செயலரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவித்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு, காவல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.