கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஆடு வெட்டி பூஜை.. அதிர்ச்சி தரும் காரணம்!

குற்றங்கள் நடக்கக்கூடாது என்று வேண்டி ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஆடு வெட்டி பூஜை நடந்ததாகத் தகவல்.

News image
ஏத்தாப்பூர் காவல் நிலையம்
Updated On :27 நவம்பர் 2024, 8:00 am

DIN

சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி, ஆடு வெட்டி முப்பூசை செய்து காவல்துறையினர் வழிபாடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக குமரன், உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் 28 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே, இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு ஆடு வெட்டி ரத்தத்தை காவல் நிலையத்தின் நுழைவாயிலில் ஊற்றி பூஜை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வெட்டி காவல் நிலையத்தின் நான்கு மூலைகளிலும் நுழைவாயிலும் வைத்து, முப்பூசை செய்து மஞ்சள் குங்குமம் ஆகியவற்றுடன், நுழைவாயிலில் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டி காவல்நிலையத்தில் இதுபோன்ற பூஜை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.