புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சென்னையில் இன்று 13 விமானங்களின் சேவை ரத்து

புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் சனிக்கிழமை 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 நவம்பர் 2024, 9:25 pm

Din

புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் சனிக்கிழமை 13 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.