நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்பு!!

ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பது பற்றி..

Published On :1 டிசம்பர் 2024, 12:40 am IST

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விடியவிடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல், புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், 7 மணிநேரமாக புயலின் மையப் பகுதி கரையைக் கடந்து வரும் நிலையில் புதுவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் பிரதீப் ஜான் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“புயல் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விழுப்புரம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும். கரையை முழுவதுமாக கடக்காமல் இன்னும் கடலை ஒட்டியுள்ளது.

இந்த அபாயமான புயல் காலை வரை கரையைக் கடக்கக் கூடும். இதனால், புதுவை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 400 மி.மீ. மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 500 மி.மீ. வரைகூட தொடலாம்.

வரலாற்று மழையாக பதிவாக உள்ளது. கரையைக் கடக்காமல் புயல் நிற்கும் போது, அதிகளவிலான மழை பெய்யும். கடலூரிலும் நாளை மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஃபென்ஜால் புயல் உருவானதில் இருந்தே கடலில் பலமுறை நகராமல் ஒரே இடத்தில் நின்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியாத அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.