அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மதுரை, தருமபுரி, ஈரோடு, தேனி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று முதல் 5 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் இயல்பை விட 14% அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com