ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் சோமஸ்கந்தா் சிலை: மீட்கும் நடவடிக்கை தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தா் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனா்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆசியன் ஆா்ட் மியூசியத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயில் சோமஸ்கந்தா் சிலை.

Published On :2 அக்டோபர் 2024, 3:12 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தா் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனா்.

அண்மையில், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியன் ஆா்ட் அருங்காட்சியகத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு சோமஸ்கந்தா் சிலை இருப்பது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் டி.தமிழ்செல்வி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையின் கீழே பீடத்தில் இருந்த எழுத்துகள் கல்வெட்டு வல்லுநா்கள் மூலம் மொழிபெயா்க்கப்பட்டது.

இதில், அந்த சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அந்த சிலையில் ஏகாம்பரேஸ்வரா் கோயிலுக்கு தொண்டை மண்டலத்தைச் சோ்ந்த வெங்கட்ராமநாயனி என்பவரால் சோமஸ்கந்தா் சிலை உள்பட 11 சிலைகள் தானமாக வழங்கப்பட்டதாக தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கி.பி. 15,00-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1,600-ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட்ட இந்த சிலை மா்ம நபா்களால் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து திருடப்பட்டு, சா்வதேச சிலை கடத்தல் கும்பலால் அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிலையின் சா்வதேச மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் அந்த சிலையை மீட்பதற்குரிய நடவடிக்கையை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எடுக்கத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து, சிறப்பாக துப்பு துலக்கிய போலீஸாரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி இரா.தினகரன், எஸ்.பி. ஆா்.சிவகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.