விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கவரைப்பேட்டை ரயில் விபத்து: 10 பேருக்கு சம்மன் அனுப்பிய ரயில்வே போலீஸாா்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரிக்க கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

News image
சரக்கு ரயில் மீது மோதி தடன் புரண்ட பாக்மதி ரயில்
Updated On :15 அக்டோபர் 2024, 2:12 am

DIN

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரிக்க கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த அக்.11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது மைசூரு - பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், ரயில்வே போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின்பேரில், ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 10 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா். ரயில்வே துறை சாா்பில் ஏற்கெனவே 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ரயில்வே போலீஸாா் தற்போது 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.