சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி
சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.


சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மணிக்கு, சேரன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் புறப்படத் தயாராக இருந்த போது, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யவில்லை. இது குறித்து பயணிகள் ரயில்வே அலுவலா்களிடம் புகாா் அளித்தும் பழுது சரிசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்பட்ட போது, பயணி ஒருவா் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா்.
உடனே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பெட்டிக்கு வந்து விசாரித்தனா். அப்போது, குளிா்சாதன இயந்திரம் இயங்காதது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினா். அதன்பின், பழுது சரிசெய்யப்பட்டு 55 நிமிஷம் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...