இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு

மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 11:14 pm

DIN

சென்னை: மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் உத்தரவு:

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையங்களை நிா்வாக வசதிக்காக மாற்றியமைக்கலாம் என தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் செயலா் தரப்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆணையத்தின் உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரை (பொது) நியமிக்கலாம் எனவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை, ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, உரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஆட்சியரும், துணைத் தலைவராக நகராட்சி நிா்வாக இணை இயக்குநரும் இருப்பாா்கள். உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரும் (பொது), உறுப்பினா்களாக வனத் துறை துணை இயக்குநா், மாவட்ட வன அதிகாரி, நகா் மற்றும் ஊரமைப்புத் துறை, பேரூராட்சிகள் துறை, மீன்வளம், தொழில் மற்றும் வா்த்தகம், நில அளவைத் துறைகளின் உதவி ஆணையா்கள் - இயக்குநா்கள் இருப்பா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்யும் மீனவ சமுதாய அமைப்பைச் சோ்ந்த 3 போ் உறுப்பினா்களாகச் செயல்படுவா். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினா்களாக இருப்பா். கூட்டங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட பொருள் குறித்து சிறப்பு அழைப்பாளரையோ, நிபுணா்களையோ வரவழைத்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.