மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

45 நிமிடங்களுக்குள் உரையை நிறைவு செய்த விஜய்!

“பிளவுவாத சக்திகள், ஊழல் கபடதாரிகள் இரு பிரிவினரும் நம் எதிரிகளே!”

News image
Updated On :27 அக்டோபர் 2024, 6:42 pm IST

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். மாலை 5.30 மணியளவில் தனது உரையை தொடங்கிய விஜய், மாலை 6.15 மணியளவில் தனது உரையை நிறைவு செய்தார்.

விஜய் பேசியதில் கவனிக்கத்தக்க விஷயமாக, ’அரசியலில் தான் ஒரு சிறுவன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்புக்கென தனி இலாகா தொடங்க வேண்டும் என்பதையும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை சிலர் ஏமாற்றுவதாக ஆளும் திமுக அரசை மறைமுகமாக அவர் கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாஸிசம் என்ற பெயரைக் குறிப்பிட்டும், பிளவுவாத அரசியல் செய்வோர் எனக் மத்திய பாஜக அரசையும் அவர் விமர்சித்துள்ளார்.

“பிளவுவாத சக்திகள், ஊழல் கபடதாரிகள் ஆகிய இரு பிரிவினருமே நம் எதிரிகளே!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.