தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

பசும்பொன்னில் ரூ. 1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :28 அக்டோபர் 2024, 6:20 am

DIN

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ரூ. 1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கை காணொலி காட்சி மூலம் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 30-ஆம் தேதி பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பிற கட்சிகளின் தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதால் ராமநாதபுரன் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.