நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னையில் கனமழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை..

News image

சென்னையில் கனமழை

Updated On :30 அக்டோபர் 2024, 12:58 pm IST

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது.

கடந்த சில நாள்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்துவந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை மற்றும் புறநகரில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மக்கள் தூணி கடைகளுக்கும், ஊர்களுக்கும் படையெடுத்துவருகின்றனர். இந்தநிலையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

வெயிலுடன் தொடங்கிய இன்றைய நாள் காலை 10 மணி முதல் சட்டென்று வானிலை மாறி குளிர்ந்த காலநிலை நிலவியது. இதையடுத்து, இன்று காலை தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக மாறி பெய்து வருகிறது.

சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.

இதனிடையே தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.