அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை கால்பந்து திடல்களை தனியாா்மயமாக்கும் தீர்மானம் வாபஸ்!

சென்னை கால்பந்து திடல்களை தனியாா்மயமாக்கும் தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் திரும்பப் பெற்றது பற்றி..

News image
சென்னை மாநகராட்சி
Updated On :30 அக்டோபர் 2024, 7:24 am

DIN

சென்னை மாநகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் கட்டணமின்றி விளையாட அனுமதிக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களையும், செயற்கைப் புல் விளையாட்டு திடல்களாக மாற்றி, ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளதாக செவ்வாய்க்கிழமை(அக்.29) நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் ஏழை, நடுத்தர மக்களின் விளையாட்டு கனவு பாதிக்கப்படும் என்பதால், தீா்மானத்தைக் கைவிட்டு விளையாட்டு மைதானங்களை மாநகராட்சியே பராமரிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும் விளையாட்டு வீரா்கள் தீா்மானம் நிறைவேற்றுவதை எதிா்த்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், மாநகராட்சி கால்பந்து விளையாட்டு திடல்களில் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் கூறியதாவது, ‘மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டுத் திடல்களும் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்த விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.